BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Monday, September 8, 2008

பேய் கோபம்

















உணர்வுகளை அறுத்து
வழியும் கண்ணீர்

நாவில் கசியும்
நஞ்செல்லாம்
மௌனக் குடத்தில்
ஏந்தி நிற்கும் உதடுகள்

கண்டனங்களை
எழுதவரும் கைகளை
வெட்டியெறியும் விரல்கள்

புலன்களின் வேர் பிடுங்க
முளைத்து கொண்டு வளர்கிறது
பேய் கோபம் ஒன்று

நீ தரும் உணவுகளைத்
தின்று தின்று
கோர பற்களால் குத்தி
கனவுகளைப் பலிக் கொடுக்க
காத்திருக்கும் என்னுள்

ஒதுங்கி நின்று அழுகிறது
ஓர் ஆத்மா

16 comments:

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

கடினமாய் கவிதை அருமை :)
தன்னிலை இழந்ததால் அழும் ஆத்மா! அதில் பேய் கோபம் காட்டியவிதம் அருமை சிநேகிதி

Anonymous said...

அழகான வார்த்தை தேர்வு...பாராட்டுகள்

VIKNESHWARAN ADAKKALAM said...

:((

MSK / Saravana said...

/நீ தரும் உணவுகளைத்
தின்று தின்று
கோர பற்களால் குத்தி
கனவுகளைப் பலிக் கொடுக்க
காத்திருக்கும் என்னுள்/

மிக மிக அருமையான கவிதை..
வார்த்தைகள் சிறப்பு..

Ravishna said...

Hi Meha,

Sorry for typing in English.I dont have time to type in tamil.

Y you have this much anger on???Leave it yaar.Everything will be happening one day....Let us take it easy.Cooooooooolllllllll

--ravishna

ரகசிய சிநேகிதி said...

===================================
sathish said...
கடினமாய் கவிதை அருமை :)
தன்னிலை இழந்ததால் அழும் ஆத்மா! அதில் பேய் கோபம் காட்டியவிதம் அருமை சிநேகிதி
===================================

===> கவிதையை நீங்கள் ரசித்த விதமும் அருமை சதீஷ். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. மீண்டும் வாருங்கள்

ரகசிய சிநேகிதி said...

==================================
இனியவள் புனிதா said...
அழகான வார்த்தை தேர்வு...பாராட்டுகள்
===================================

====> வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மகிழ்ச்சி புனிதா.

இந்த கவிதை உண்மையிலே பேய் கோபத்தில் எழுதியதால் வார்த்தைகள் நான் தேர்வு செய்யவில்லை. அவைகளே தானாக வந்து விழுந்தன கோபத்தைப் போல :)

ரகசிய சிநேகிதி said...

===================================
VIKNESHWARAN said...
:((

==================================

=====> இதற்கு என்ன அர்த்தம்? கவலையா ? கோபமா?

ரகசிய சிநேகிதி said...

===================================
Saravana Kumar MSK said...
மிக மிக அருமையான கவிதை..
வார்த்தைகள் சிறப்பு..
===================================

====> வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி கலந்த நன்றி சரவணக் குமார். மீண்டும் வாருங்கள்.

ரகசிய சிநேகிதி said...

===================================
Ravishna said...
Hi Meha,

Sorry for typing in English.I dont have time to type in tamil.

Y you have this much anger on???Leave it yaar.Everything will be happening one day....Let us take it easy.Cooooooooolllllllll
===================================

பரவாயில்லை ரவிஷ்னா. .. அடுத்த முறை தமிழில் பின்னூட்டம் எழுத முயற்சியுங்கள்.. தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி. மீண்டும் வாருங்கள்..

MSK / Saravana said...

அடுத்த கவிதை எப்போ..??

priyamudanprabu said...

புலன்களின் வேர் பிடுங்க
முளைத்து கொண்டு வளர்கிறது
பேய் கோபம் ஒன்று
இ/////////////

நல்ல சொல்லாடல்

ரகசிய சிநேகிதி said...

==================================
Saravana Kumar MSK said...
அடுத்த கவிதை எப்போ..??
==================================
கொஞ்சம் busy
தங்களின் எதிர்பார்ப்பில் மகிழ்கிறேன்.

ரகசிய சிநேகிதி said...

===================================
பிரபு said...
புலன்களின் வேர் பிடுங்க
முளைத்து கொண்டு வளர்கிறது
பேய் கோபம் ஒன்று
இ/////////////

நல்ல சொல்லாடல்
===================================

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பிரபு. மீண்டும் வாருங்கள்!

Arun Jeevan said...

nice lines..

Bee'morgan said...

ஒவ்வொரு வார்த்தையாக செதுக்கியிருக்கிறீர்கள்... பாராட்டுகள்..
//
நாவில் கசியும்
நஞ்செல்லாம்
மௌனக் குடத்தில்
ஏந்தி நிற்கும் உதடுகள்
//
அருமையான கட்டமைப்பு