BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Tuesday, May 25, 2010

உனதசைவில் என் பரிமாணங்கள்



உயிரெனும் உளியால்

உனை வதைத்து; உடல் வருத்தி

உருக்கொண்டு; உயிர்க்கொண்டு

நானும் அறுந்து விழுகிறேன் உன்னிலிருந்து

உலகத்தின் ஓர் உயிர் விழுதாய்

என் கண்ணீர் கசியும் உன் மடியோரம்

Tuesday, May 11, 2010

பரிகாசம்


முட்களாய்; கற்களாய்

இதயத்தைத் துளையிடும் அம்புகளாய்

நீங்கள் எறிந்த சொற்களில்

கலங்கி நிற்கிறது

அந்த சிறு ஓடை

தெறித்து விழுகிறது

ஓரிரு துளிகள்

அனலாய் பூமியில்

சமயத்தில் இந்த இயலாமையில்

அங்கேயே; அப்படியே அமிழ்ந்தும்
போகின்றன அவைகள்
இறைவனை சபித்தபடி

Friday, May 7, 2010

தலையணைக் கவிதையும் தங்கிவிடும் காதலும்



தனிமை தாங்கியே
வருகிறது இன்றைய
இரவும்

குருதி வழியும் இதழும்
பசலை பற்றிய விழியிலும்
வந்து நிற்கும் உன் உருவம்
அந்த திசையொன்றின்
மறைவில் நீ வாழ்வதாய்
செய்தியொன்றை கொண்டு வந்து
சேர்க்கிறது அறை இருளோடு
உன்னை துரத்தி
உன்னை விலக்கி
உன்னை மறந்து
இமைகளில் நீ படர்ந்திருப்பதை அறிந்து
நீ இல்லாத இடம்
தேடி பயணிக்கிறது
என் சில இரவு கவிதைகள்

மீண்டும் நாளை
எந்த நிறுத்தத்தில்
உன்னை சந்திப்பேன்; பிரிவேன் என்ற
வழக்கமான சில வினாக்களுடன்.....