BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Tuesday, May 6, 2008

அன்புள்ளக் கடவுளுக்கு



அன்புள்ளக் கடவுளுக்கு,
இதுதான் இறுதி என்று
எழுதுகிறேன்..
எத்தனை முறை எழுதுவது
கடிதம் உனக்கு?

பிரிக்கப்படாமலும் படிக்கப்படாமலும்
கிடக்கின்றன அவை
முகவரியே நீ தான்
தர மறுக்கிறாய்
உள்ளே இருந்து கொண்டு
வர மறுக்கிறாய்
நீ யார் என்ற போருக்குள்
யார் நீ என்ற கேள்விகளுக்குள்
விரிந்துகொண்டே போகிறாய்
அழுகையை மட்டும்
உனக்கும் எழுதிவைக்கிறேன்
நீ தான் பொறுப்பென்று
சுகத்தை எனக்குள்
பதுக்கி வைக்கிறேன்
நிரந்தரமென்று
எதையும் பொருட்படுத்தாத
உன் மௌனத்தைக் கண்டு
என் பேனா முனைகள்
உடைகின்றன
தூர வீசுகின்றேன்
கோபம் களைந்து
மீண்டும் எழுதுகிறேன்
உன் மௌனத்தைக் கலைக்க
ஒரு கடிதம்
இதுதான் இறுதியென்று...
இப்படிக்கு,
என்றும் நான்

3 comments:

தமிழ் said...

/நீ யார் என்ற போருக்குள்
யார் நீ என்ற கேள்விகளுக்குள்
விரிந்துகொண்டே போகிறாய்


அழுகையை மட்டும்
உனக்கும் ஏழுதி
வைக்கிறேன்


நீ தான் பொறுப்பென்று
சுகத்தை எனக்குள்
ஒதுக்கி வைக்கிறேன்
நிரந்திரமென்று

எதையும் பொறுட்படுத்தாத
உன் மௌனத்தைக் கண்டு
என் பேனா முனைகள்
உடைகின்றன
தூர வீசுகின்றேன்


கோபம் களைந்து
மீண்டும் எழுதுகிறேன்
உன் மௌனத்தைக் களைக்க
ஒரு கடிதம்
இதுதான் இறுதியென்று...


இப்படிக்கு,
என்றும் நான் /

அழகான வரிகள்

ரகசிய சிநேகிதி said...

நன்றி திகழ்மிளிர்... மீண்டும் வாருங்கள்

ரூபஸ் said...

கடவுளுக்கே கடிதம் எழுதும் உங்கள் தைரியம் பாராட்டத்தக்கது..

ஏதாவது பதில் வந்தால் தெரியப்படுத்துங்கள்....