ஓர் அக்னி இரவில்
தோன்றிய கனவு
கதற கதற
நெரிக்கப் பட்டது கழுத்து
விழிகளில் குருதி வழிய
உடலெங்கும் நக கீறல்கள்
பலத்தக் காயத்திற்கு உட்பட்ட
உடல் மீது எறியப்பட்டது
திரவமொன்று
கனவில் பொசுங்கிய நான்
கனவில் பொசுங்கிய நான்
இறுதி சடங்கில் மௌனமாய்
உன் கைகளைப் பற்றி பிரிய
அவசர அவசரமாய்
எரியூட்டி போக
வருகிறாய் நீ
நான் விழிப்பதற்குள்
11 comments:
\\அவசர அவசரமாய்
எரியூட்டி போக
வருகிறாய் நீ
நான் விழிப்பதற்குள்\\
மிக அருமை.
மிகச்சிறந்த கவிதை. வாழ்த்துகள்.
கவிதையை இன்னும் முழுதாக படிக்கவில்லை . படித்தவுடன் விரிவாக பின்னுட்டம் இடுகிறேன்
ரகசிய சிநேகிதி---- அட்டகாசமான பெயர் இதுங்க அதுக்குதான் இந்த பின்னுட்டம்
கவிதை ரொம்ப பிடித்திருக்கின்றது...
It is good. Congrats and all the best.
Friendly,
Ravishna
நல்லாருக்குங்க!
ஆனா, "நெரிக்கப் பட்டது" ஏன் துண்டாயிடுச்சு?
//அவசர அவசரமாய்
எரியூட்டி போக
வருகிறாய் நீ
நான் விழிப்பதற்குள்//
உணர்வின் வெளிப்பாடு அருமை...
பாரதி கண்ட புதுமை பெண் நீங்கதாங்க நினைக்கிறேன்.... வாழ்த்துகள்...
Love it ! I am a big fan of urs for life!
//இறுதி சடங்கில் மௌனமாய் உன் கைகளைப் பற்றி பிரிய //
இப்படியொரு அன்பா?
really it speaks a lot
Post a Comment