கழட்டி வைத்த நட்போடு
நீ நடப்பதையும்; கடப்பதையும்
கவனித்தப்படி சிரிக்கிறது
உன் பாதங்கள் வேரொன்றுடன்
இவளது இன்னொரு முகம்
Posted by ரகசிய சிநேகிதி at Sunday, June 13, 2010 4 comments
உயிரெனும் உளியால்
உனை வதைத்து; உடல் வருத்தி
உருக்கொண்டு; உயிர்க்கொண்டு
நானும் அறுந்து விழுகிறேன் உன்னிலிருந்து
உலகத்தின் ஓர் உயிர் விழுதாய்
என் கண்ணீர் கசியும் உன் மடியோரம்
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, May 25, 2010 3 comments
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, May 11, 2010 3 comments
Posted by ரகசிய சிநேகிதி at Friday, May 07, 2010 0 comments

நீள்கிறது இடைவெளி
நமக்கான இரவுகள்
நமக்கான கனவுகள்
நமக்காக காத்திருப்பதும்
நாம் அதற்காக விழித்திருப்பதும்
அழகாய் தான் உள்ளது
இந்த பெருவெளி
ஒரு மொட்டின் மௌனத்தைப் போன்று
Posted by ரகசிய சிநேகிதி at Thursday, April 08, 2010 0 comments

Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, April 06, 2010 0 comments

வார்த்தைகளால் தொடுவதும்
மௌனங்களால் முத்தமிடுவதும்
காற்றலைகளால் பகிர்கிறோம்
உயிர் மூச்சை
உன் முகம் பற்றி அலைகிறதென்
என் கண்கள்
ஒவ்வொரு முறையும்
பயணிக்கிறாய் என்னுடன்
எந்த தீவில் பிறந்தாயோ
எந்த வீதியில் இணைவோமோ
மறைந்து தினம் மலர்கிறது நேசம்
பாதசுவடோடு சேர்ந்து விழுகிறது
பின் விலகி நகர்கிறது
உருவமற்ற நிழலாய் நம் பயணம்
நிரம்ப உணர்கிறேன் உன் நேசம்
காற்று மட்டுமே நிரப்பி விடுகிறது
உன் அணைப்பை
நாட்கள் கடக்க; மாதம் கடக்க
கடந்து கொண்டே இருக்க
நான்கு கண்களின் கனவுகளும்
வழி நெடுகிலும் வலியோடு
சுமந்து வருகிறது இந்த பொழுது
உன்னோடும் என்னோடும்
இரவும்; இரவோடு சேர்ந்த பகலையும்
எந்த தேசத்தில்
என்னோடு சேர்ந்து காண்பாய்
என் கழுத்து வரை இந்த கவிதையில் நீ
உன் கனவுகளின் தேடலில் நீ
மௌனிக்கிறது உயிர் அன்பு
வானமற்ற நிலவாய்...
Posted by ரகசிய சிநேகிதி at Saturday, March 27, 2010 2 comments
Posted by ரகசிய சிநேகிதி at Wednesday, June 24, 2009 4 comments
நிழல் கொடுத்த இலைகள்
இங்கு விலகிக் கொண்டன
நிழல் மட்டும் எரிகிறது
மணற்தரையில்
இலை உதிரும்
பின் இடம்பெயரும்
என்பதை மறந்த நிழல்
காத்திருக்கிறது
தன்னைப் போன்ற பிற
நிழல்களின் நிழல்களோடு
அதனிலைகளின் கதையோடு
அவைகளும் இல்லாமல் போகும்
இருள் சூழூம்
இல்லை
மழை இந்த மண்ணைக்
கவ்வும்
என்பதை உணர மறந்து
காத்திருக்கிறது கடந்து போன
பாதங்களுக்கான கால்மிதியாய்
கடலில் காலச் சூரியன்
உறங்கி போன பின்னும்
இருள் உறவாக வந்த பின்னும்
காத்திருக்கிறது
இங்கு எப்போதும்
இலையுதிர் காலம்
என்பதை நினைவில் இழந்து
நிலையாகிறது நிழலங்கு
Posted by ரகசிய சிநேகிதி at Wednesday, June 17, 2009 3 comments
ஆசைகளின் ஆதிக்கம்
நெருக்குதலில் தேவைகள்
பாராங்கற்களிடையே விழுந்து
கிடந்த நாட்களைத்
தகர்த்து எடுக்கையில்
கழிந்து முடிந்தது
ஒரு யுகத்தின் போர்
புழுவாய் உருப்பெறுகிறேன்
ஒவ்வொரு இரவும்
உணவொன்று தேடி
இன்றாவது அது
கிடைக்குமா என்று
Posted by ரகசிய சிநேகிதி at Saturday, May 30, 2009 8 comments
அன்பு எனப்படுவது... எதையும் கேட்பதில்லை;கொடுக்கிறது.