
கடிக்கார முட்கள்
விஷமாகி கொண்டிருக்கின்றன
காத்திருத்தலின் வலிகளோடு;
இதயம் நுழைந்து
விழி சேராது ப்பிரியங்களில்
நிறைந்து நீள்கிறது
நிலாக்கள் அற்ற இரவுகள்
கூடுகள் காணாத பறவையென
நம்மிருப்பு
நாட்களின் நகர்வுகளில்
நரகமாகி கிடக்க
நிகழ்காலங்களை விற்று
எதிர்காலத்திற்குள்
இறந்து கிடக்கிறோம்
வண்ணத்துப்பூச்சிகளாய்
நீ நீயாக நான் நானாக
யாரும் அறியா வண்ணம்
கண்ணீர் துளிகளுக்குள்
இன்னும் எழுதப்படாத
நம் கடிதங்களின்
கடைசி வார்த்தைகளில்
என்றும் அன்புடன்
நான் உனக்காக
Tuesday, July 20, 2010
காலச் சிலுவைகள்
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, July 20, 2010 3 comments
Sunday, June 13, 2010
பழகிய நட்பும் பழைய செருப்பும்
கழட்டி வைத்த நட்போடு
நீ நடப்பதையும்; கடப்பதையும்
கவனித்தப்படி சிரிக்கிறது
உன் பாதங்கள் வேரொன்றுடன்
Posted by ரகசிய சிநேகிதி at Sunday, June 13, 2010 4 comments
Tuesday, May 25, 2010
உனதசைவில் என் பரிமாணங்கள்
உயிரெனும் உளியால்
உனை வதைத்து; உடல் வருத்தி
உருக்கொண்டு; உயிர்க்கொண்டு
நானும் அறுந்து விழுகிறேன் உன்னிலிருந்து
உலகத்தின் ஓர் உயிர் விழுதாய்
என் கண்ணீர் கசியும் உன் மடியோரம்
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, May 25, 2010 3 comments
Tuesday, May 11, 2010
பரிகாசம்
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, May 11, 2010 3 comments
Friday, May 7, 2010
தலையணைக் கவிதையும் தங்கிவிடும் காதலும்
என் சில இரவு கவிதைகள்
Posted by ரகசிய சிநேகிதி at Friday, May 07, 2010 0 comments
Thursday, April 8, 2010
இடைவெளியில் ஒரு தியானம்

நீள்கிறது இடைவெளி
நமக்கான இரவுகள்
நமக்கான கனவுகள்
நமக்காக காத்திருப்பதும்
நாம் அதற்காக விழித்திருப்பதும்
அழகாய் தான் உள்ளது
இந்த பெருவெளி
ஒரு மொட்டின் மௌனத்தைப் போன்று
Posted by ரகசிய சிநேகிதி at Thursday, April 08, 2010 0 comments
Tuesday, April 6, 2010
உள்ளங்கைகள்

உன் இருப்பு என்னோடு
உள்ளங்கைகள் போன்றது
அவைகள் தரும் மென்மையில்
கோடுகள் இணையும் மத்தியில்
கடவுள் அங்கு வாழ்வதாய் ஐதீகம்
என்னுள் கடந்து செல்லும்
உன்னை அங்குதான் கண்கிறேன்
இமை கொள்ளாமல்
விழிக்கொண்ட தேடலில்
மௌனம் தோய்ந்த கன்னத்தை
தாங்கி நிற்கும் இதழாய்
என்னோடு பேசும்
இன்னொரு மொழியாய்
இங்கு தான் துயில்கிறாய்
தூரமொன்றும் இல்லை
எல்லையில் நான் சுமக்கும்
உன் என் இதயம்
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, April 06, 2010 0 comments
Saturday, March 27, 2010
நான்கு கண்களின் கனவுகள்

வார்த்தைகளால் தொடுவதும்
மௌனங்களால் முத்தமிடுவதும்
காற்றலைகளால் பகிர்கிறோம்
உயிர் மூச்சை
உன் முகம் பற்றி அலைகிறதென்
என் கண்கள்
ஒவ்வொரு முறையும்
பயணிக்கிறாய் என்னுடன்
எந்த தீவில் பிறந்தாயோ
எந்த வீதியில் இணைவோமோ
மறைந்து தினம் மலர்கிறது நேசம்
பாதசுவடோடு சேர்ந்து விழுகிறது
பின் விலகி நகர்கிறது
உருவமற்ற நிழலாய் நம் பயணம்
நிரம்ப உணர்கிறேன் உன் நேசம்
காற்று மட்டுமே நிரப்பி விடுகிறது
உன் அணைப்பை
நாட்கள் கடக்க; மாதம் கடக்க
கடந்து கொண்டே இருக்க
நான்கு கண்களின் கனவுகளும்
வழி நெடுகிலும் வலியோடு
சுமந்து வருகிறது இந்த பொழுது
உன்னோடும் என்னோடும்
இரவும்; இரவோடு சேர்ந்த பகலையும்
எந்த தேசத்தில்
என்னோடு சேர்ந்து காண்பாய்
என் கழுத்து வரை இந்த கவிதையில் நீ
உன் கனவுகளின் தேடலில் நீ
மௌனிக்கிறது உயிர் அன்பு
வானமற்ற நிலவாய்...
Posted by ரகசிய சிநேகிதி at Saturday, March 27, 2010 2 comments
Wednesday, June 24, 2009
இவள்=காகிதப்பூ
கைகளால் நசுக்கப்பட்டு
வீசும் போது எல்லாம்
திசைகள் அறியா
செல்வதும்; கால்களால்
மிதிப்படுவதுமாய்
பிறவி கோலம்
இதுவென தொடர்வதும்
செய்த தீய்வினை தான்
என்ன ?
தீர்ப்பெழுதிய பேனாக்களில்
உடைந்து கிடக்கிறது
காகிதப் பூவிற்கான பதில்
புறம் தள்ளி வைக்கிறது
பூஜை அறை விதி
Posted by ரகசிய சிநேகிதி at Wednesday, June 24, 2009 4 comments
Wednesday, June 17, 2009
ஒரு நிழலின் கதை
நிழல் கொடுத்த இலைகள்
இங்கு விலகிக் கொண்டன
நிழல் மட்டும் எரிகிறது
மணற்தரையில்
இலை உதிரும்
பின் இடம்பெயரும்
என்பதை மறந்த நிழல்
காத்திருக்கிறது
தன்னைப் போன்ற பிற
நிழல்களின் நிழல்களோடு
அதனிலைகளின் கதையோடு
அவைகளும் இல்லாமல் போகும்
இருள் சூழூம்
இல்லை
மழை இந்த மண்ணைக்
கவ்வும்
என்பதை உணர மறந்து
காத்திருக்கிறது கடந்து போன
பாதங்களுக்கான கால்மிதியாய்
கடலில் காலச் சூரியன்
உறங்கி போன பின்னும்
இருள் உறவாக வந்த பின்னும்
காத்திருக்கிறது
இங்கு எப்போதும்
இலையுதிர் காலம்
என்பதை நினைவில் இழந்து
நிலையாகிறது நிழலங்கு
Posted by ரகசிய சிநேகிதி at Wednesday, June 17, 2009 3 comments



