இந்த மொழியொன்று போதும்
வழியில் நானும் வருகிறேன்
உன்னோடு
போகும் இடமெல்லாம்
நீயும் வருவதாய் நினைவோடு
பூமியில் உன் பாதங்கள் இல்லை
மழையில் உன் நிறமும் இல்லை
வானில் நீயுமாய்
வண்ணக் கோடுகள்
தோன்ற; மறைய
விழி மட்டும் வழி கொண்டு
காற்றில் சுவாசங்கள் உள்ளவரை
நீ வருவதாய் நானும் தொடர
முடிந்து போகலாம் காலப் புள்ளிகள்
முடிவில் வளர்ந்தும் விடலாம்
இந்த விழுதுகள்
எது அதுவோ
நிகழ்கால இலையாய் இரு
என் நிழலுக்கு இப்போது
Monday, May 25, 2009
இலையாக நீ
Posted by ரகசிய சிநேகிதி at Monday, May 25, 2009 2 comments
Thursday, March 19, 2009
பேசும் சித்திரங்கள்
சுவரில்லாமல் சித்திரங்கள் நான்
வரையத் தொடங்கிய பொழுதொன்றில்
இருள் சூழ
எங்கோ மறைந்து போயின அவை
பின் என் நிழலுக்குப் பின்னால்
நின்று பேருருவம் கொண்டு
சிரிக்கத் தொடங்கியது
தன்னை ஓர் எஜமானி என்று
சொல்லிக் கொண்டது
தன் கர்வம் தீர
என்னை
முழுதும் தின்று விழுங்கியது
மூச்சடைத்து நான்
இறந்த போது
கர்ஜித்துக் கொண்டே வெளியேறியது
மீண்டும் நான் வெளிப்படுவேன்
நீண்ட மௌனப் பெருவெளிக்குப் பின்
மீண்டும் நான் உயிர்ப் பெற்றேன்..
Posted by ரகசிய சிநேகிதி at Thursday, March 19, 2009 12 comments
Tuesday, March 3, 2009
ஓர் அக்னி இரவு
கனவில் பொசுங்கிய நான்
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, March 03, 2009 11 comments
Monday, January 19, 2009
அந்தி

சில்லென்ற நதியில்
சிணுங்கும் தென்றல்
கலகலவென இலைகள்
சிரிக்க…
திட்டு திட்டாய்
பாதச் சுவடுகள்
பட்டும் படாமல்
ஏந்தி நிற்கும் மணல்வெளி
வெயிலின் விழிகள் பட்டு
வெட்கத்தில் சிவந்த கன்னம்
மௌனமாய் விடைபெறும்
நேரமிது
பகலும் இல்லை
இரவும் இல்லை
அழகான அந்தி என்றேன்
அழகே உன்னைக் கணடு
Posted by ரகசிய சிநேகிதி at Monday, January 19, 2009 11 comments
Wednesday, November 19, 2008
தூரப் போ...
ஏன் ரோஜாக்களை
ஏந்தி நிற்கிறாய்
கல்லறை மீது செலுத்தவா?
சோகங்கள் கறைப்படியும் முன்
தூரப்போ....
அவைகளாவது சிரிக்கட்டுமே
Posted by ரகசிய சிநேகிதி at Wednesday, November 19, 2008 11 comments
Thursday, October 30, 2008
நினைவில் மட்டுமே

• ஆழ்ந்த உறக்கத்தில் அப்பா
துக்கத்தில் ஆழ்ந்து விட்ட வீடு
சிரித்துக் கொண்டே நுழைந்தன
மலர்வளையங்கள்
• அறையில் அழுது
கொண்டிருக்கும் அம்மா
சுவரில் மௌனமாய் சிரித்துக்
கொண்டிருக்கும் அப்பா
தன் நெற்றிப் பொட்டை
அப்பாவின் நிழல் படத்தில்
இடும் அம்மா.
• இன்றும் அப்பாவின் உழைப்பை
ஞாபகப்படுத்திக் கொண்டே
இருக்கின்றன
வாசலில் கிடக்கும்
அவரின் தேய்ந்த செருப்புகள்
• பள்ளிக்கு வழியனுப்பி வைத்த
அப்பாவை
முட்கள் குத்திய வலியோடு
கல்லறைக்கு வழியனுப்பி
நின்றன கால்கள்
• நிம்மதியை எடுத்துக் கொண்டு
நிம்மதியாய் உறங்கும் அப்பா
கனவில் வந்து போனாலும்
வருவது அப்பா என்பது தான் நிஜம்.
• உரிமையோடு அழைக்க முடியாதபடி
இன்று நான் இழந்து விட்ட
ஒரு வார்த்தை "அப்பா"
Posted by ரகசிய சிநேகிதி at Thursday, October 30, 2008 13 comments
Friday, September 19, 2008
நிகழ்ந்தாக வேண்டும்
நிகழ்ந்தாக வேண்டும்
என்ற நிபந்தனைகளும்
நடந்தாக வேண்டும்
என்ற வற்புறுத்தல்களிலும்
நடக்க தொடங்கும்
கால்கள்
பொழுது விடிந்ததினால்
விரும்பாமல் விழித்து கொள்ளும்
கண்களில்
மிச்சமிருப்பது வெறுமையே
எதிர்ப்படும் சிலருக்காக
அவ்வப்போது உதிர்ந்துவிடும்
புன்னகையை
விரித்தி பார்த்தால்
உண்மையில் எதுமே இல்லை
என்று புலப்படும் ஒரு
கூற்றில் குறுகி போயுள்ளது
இந்த இரவல் வாழ்க்கை!
முடிந்த பொழுதில்
மலர போகிறது
நாளை என்றொரு பொழுது
இதே வண்ணத்தில்
நீயும் நானும் பூசிக் கொள்ள
மீண்டும்
நிகழ்ந்தாக வேண்டும் என்ற
நிர்பந்தத்தோடு
சில நிபந்தனைகளோடு
Posted by ரகசிய சிநேகிதி at Friday, September 19, 2008 24 comments
Monday, September 8, 2008
பேய் கோபம்

உணர்வுகளை அறுத்து
வழியும் கண்ணீர்
நாவில் கசியும்
நஞ்செல்லாம்
மௌனக் குடத்தில்
ஏந்தி நிற்கும் உதடுகள்
கண்டனங்களை
எழுதவரும் கைகளை
வெட்டியெறியும் விரல்கள்
புலன்களின் வேர் பிடுங்க
முளைத்து கொண்டு வளர்கிறது
பேய் கோபம் ஒன்று
நீ தரும் உணவுகளைத்
தின்று தின்று
கோர பற்களால் குத்தி
கனவுகளைப் பலிக் கொடுக்க
காத்திருக்கும் என்னுள்
ஒதுங்கி நின்று அழுகிறது
ஓர் ஆத்மா
Posted by ரகசிய சிநேகிதி at Monday, September 08, 2008 16 comments
Tuesday, September 2, 2008
சிதறிய பிம்பங்கள்
மனசாட்சியை விலங்கிட்டு
கடவுளைச் சிறைட்ட
உன் ரேகையில் பதிந்து
கிடந்தது ஒரு வாசகம்
துரோகம் என்று
அதிகாலை மழை
போர்வைக்குள்
ஒளிந்து கொள்ளும்
உன் நினைவுகள்
தீப்பற்றி எரிகிறது
என் தெரு வீடுகள்
தென்றலின் வருகைக்காக
திறந்து வைத்த ஜன்னலில்
ஓலமிட்டு நிற்கிறது
நரி ஒன்று
ஒவ்வொரு வரியிலும்
கறைப்படியும் உன்
நினைவுகளைச்
சொல்ல வரும் கவிதை
இறக்கிறதா ? பிறக்கிறதா?
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, September 02, 2008 26 comments
Tuesday, August 19, 2008
ஏய் மழையே
துளிகள் எல்லாம் தூரிகையாய்
மேனியெங்கும் மெல்ல வருடி
மேகம் வரைந்த ஓவியங்கள்
கோலமிடும் பாதத்தில்
ஈரம் கொண்ட மருதாணி
நாணத்தில் சேர்ந்து நிறக்க
உன்னில் கரையும் என்னை
கொஞ்சம் காதலித்துப் போ
வெள்ளித் துளியே
நனையும் பருவத்தை
நாளையும் தருவதாய்
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, August 19, 2008 13 comments

