• ஆழ்ந்த உறக்கத்தில் அப்பா
துக்கத்தில் ஆழ்ந்து விட்ட வீடு
சிரித்துக் கொண்டே நுழைந்தன
மலர்வளையங்கள்
• அறையில் அழுது
கொண்டிருக்கும் அம்மா
சுவரில் மௌனமாய் சிரித்துக்
கொண்டிருக்கும் அப்பா
தன் நெற்றிப் பொட்டை
அப்பாவின் நிழல் படத்தில்
இடும் அம்மா.
• இன்றும் அப்பாவின் உழைப்பை
ஞாபகப்படுத்திக் கொண்டே
இருக்கின்றன
வாசலில் கிடக்கும்
அவரின் தேய்ந்த செருப்புகள்
• பள்ளிக்கு வழியனுப்பி வைத்த
அப்பாவை
முட்கள் குத்திய வலியோடு
கல்லறைக்கு வழியனுப்பி
நின்றன கால்கள்
• நிம்மதியை எடுத்துக் கொண்டு
நிம்மதியாய் உறங்கும் அப்பா
கனவில் வந்து போனாலும்
வருவது அப்பா என்பது தான் நிஜம்.
• உரிமையோடு அழைக்க முடியாதபடி
இன்று நான் இழந்து விட்ட
ஒரு வார்த்தை "அப்பா"
Thursday, October 30, 2008
நினைவில் மட்டுமே
Posted by ரகசிய சிநேகிதி at Thursday, October 30, 2008 13 comments
Subscribe to:
Posts (Atom)