நிகழ்ந்தாக வேண்டும்
என்ற நிபந்தனைகளும்
நடந்தாக வேண்டும்
என்ற வற்புறுத்தல்களிலும்
நடக்க தொடங்கும்
கால்கள்
பொழுது விடிந்ததினால்
விரும்பாமல் விழித்து கொள்ளும்
கண்களில்
மிச்சமிருப்பது வெறுமையே
எதிர்ப்படும் சிலருக்காக
அவ்வப்போது உதிர்ந்துவிடும்
புன்னகையை
விரித்தி பார்த்தால்
உண்மையில் எதுமே இல்லை
என்று புலப்படும் ஒரு
கூற்றில் குறுகி போயுள்ளது
இந்த இரவல் வாழ்க்கை!
முடிந்த பொழுதில்
மலர போகிறது
நாளை என்றொரு பொழுது
இதே வண்ணத்தில்
நீயும் நானும் பூசிக் கொள்ள
மீண்டும்
நிகழ்ந்தாக வேண்டும் என்ற
நிர்பந்தத்தோடு
சில நிபந்தனைகளோடு
Friday, September 19, 2008
நிகழ்ந்தாக வேண்டும்
Posted by ரகசிய சிநேகிதி at Friday, September 19, 2008 24 comments
Monday, September 8, 2008
பேய் கோபம்

உணர்வுகளை அறுத்து
வழியும் கண்ணீர்
நாவில் கசியும்
நஞ்செல்லாம்
மௌனக் குடத்தில்
ஏந்தி நிற்கும் உதடுகள்
கண்டனங்களை
எழுதவரும் கைகளை
வெட்டியெறியும் விரல்கள்
புலன்களின் வேர் பிடுங்க
முளைத்து கொண்டு வளர்கிறது
பேய் கோபம் ஒன்று
நீ தரும் உணவுகளைத்
தின்று தின்று
கோர பற்களால் குத்தி
கனவுகளைப் பலிக் கொடுக்க
காத்திருக்கும் என்னுள்
ஒதுங்கி நின்று அழுகிறது
ஓர் ஆத்மா
Posted by ரகசிய சிநேகிதி at Monday, September 08, 2008 16 comments
Tuesday, September 2, 2008
சிதறிய பிம்பங்கள்
மனசாட்சியை விலங்கிட்டு
கடவுளைச் சிறைட்ட
உன் ரேகையில் பதிந்து
கிடந்தது ஒரு வாசகம்
துரோகம் என்று
அதிகாலை மழை
போர்வைக்குள்
ஒளிந்து கொள்ளும்
உன் நினைவுகள்
தீப்பற்றி எரிகிறது
என் தெரு வீடுகள்
தென்றலின் வருகைக்காக
திறந்து வைத்த ஜன்னலில்
ஓலமிட்டு நிற்கிறது
நரி ஒன்று
ஒவ்வொரு வரியிலும்
கறைப்படியும் உன்
நினைவுகளைச்
சொல்ல வரும் கவிதை
இறக்கிறதா ? பிறக்கிறதா?
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, September 02, 2008 26 comments
Tuesday, August 19, 2008
ஏய் மழையே
துளிகள் எல்லாம் தூரிகையாய்
மேனியெங்கும் மெல்ல வருடி
மேகம் வரைந்த ஓவியங்கள்
கோலமிடும் பாதத்தில்
ஈரம் கொண்ட மருதாணி
நாணத்தில் சேர்ந்து நிறக்க
உன்னில் கரையும் என்னை
கொஞ்சம் காதலித்துப் போ
வெள்ளித் துளியே
நனையும் பருவத்தை
நாளையும் தருவதாய்
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, August 19, 2008 13 comments
Friday, August 15, 2008
கொலை முயற்சி
அன்றே
தேடியும்
தீர்க்க வரும்
Posted by ரகசிய சிநேகிதி at Friday, August 15, 2008 14 comments
Thursday, August 14, 2008
ஒர் அழைப்பு
மறந்த உறக்கத்தில்
விசைகளின்றி
தட்டி எழுப்பும்
இடது புருவத் துடிப்பு
உன் பயணங்கள்
என்னை நோக்கி
வருவதாய் தீண்டி
ஒர் தேவதையின்
அழைப்பு
Posted by ரகசிய சிநேகிதி at Thursday, August 14, 2008 3 comments
Thursday, August 7, 2008
இதுவும் நட்புதான்
Posted by ரகசிய சிநேகிதி at Thursday, August 07, 2008 12 comments
அவளும் பெண் என்பதால்
உன் புது துணைக்கான
என் உயிர் அறைகள்
மரணம் சம்பவிப்பதாய்
கனவில் வரும்
உன் தாயிடம் சொல்
பெண் என்பதால்
அவளுக்கே புரியும்
சிதைந்த என் இதயத்தின்
வலிகளும்
அதில் இரத்தம்
ஒழுகும் உன் நினைவுகளும்
நீயாக வந்து பிடுங்கினாலும்
மீண்டும் விழுதாய் பிறக்கும்
உன் மேல் நான் கொண்ட
மட்டுமே அறிவாள்
Posted by ரகசிய சிநேகிதி at Thursday, August 07, 2008 4 comments







