BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Tuesday, June 24, 2008

தூரத்தில் தோழி



தனிமை ஒவ்வொரு முறையும்
என்னை சூழ்ந்து கொண்டபோது
உனக்கும் எனக்குமான
கண்ணாடியில்

பிரிவின் கீறல்கள்
முகம்கள் மறைத்து மீண்டும்
சிரிக்க முயற்சிக்கின்றன
எதையும் தொடர முடியாமல்
எதுவும் தொடவும் முடியாமல்

தவிக்கும் பாதங்களுக்கிடையில்

Tuesday, May 27, 2008

உறவுகள்


Friday, May 16, 2008

அம்மா

Tuesday, May 6, 2008

அன்புள்ளக் கடவுளுக்கு



அன்புள்ளக் கடவுளுக்கு,
இதுதான் இறுதி என்று
எழுதுகிறேன்..
எத்தனை முறை எழுதுவது
கடிதம் உனக்கு?

பிரிக்கப்படாமலும் படிக்கப்படாமலும்
கிடக்கின்றன அவை
முகவரியே நீ தான்
தர மறுக்கிறாய்
உள்ளே இருந்து கொண்டு
வர மறுக்கிறாய்
நீ யார் என்ற போருக்குள்
யார் நீ என்ற கேள்விகளுக்குள்
விரிந்துகொண்டே போகிறாய்
அழுகையை மட்டும்
உனக்கும் எழுதிவைக்கிறேன்
நீ தான் பொறுப்பென்று
சுகத்தை எனக்குள்
பதுக்கி வைக்கிறேன்
நிரந்தரமென்று
எதையும் பொருட்படுத்தாத
உன் மௌனத்தைக் கண்டு
என் பேனா முனைகள்
உடைகின்றன
தூர வீசுகின்றேன்
கோபம் களைந்து
மீண்டும் எழுதுகிறேன்
உன் மௌனத்தைக் கலைக்க
ஒரு கடிதம்
இதுதான் இறுதியென்று...
இப்படிக்கு,
என்றும் நான்

Friday, April 4, 2008

ஒன்று

ஒரு நிமிடம் போதும்
ஒரு சொல் போதும்
ஒரு பார்வை போதும்
ஒரு பகல் போதும்
ஒரு இரவு போதும்
ஒரு நிலவும் போதும்
ஏதோ ஒன்றை நிகழ்த்த

எதையாவதை இழக்க
எதையாவதை கொடுக்க
எதையாவதை விரும்ப
எதையாவதை வெறுக்க
ஏதோ ஒன்று போதும்!



Friday, March 28, 2008

மௌனமும் மரணமும்

* கொன்று சாய்ப்பது
மரணம் மட்டுமல்ல
சிலரின் சிலசமய
மௌனங்களும் தான்