
தனிமை ஒவ்வொரு முறையும்
என்னை சூழ்ந்து கொண்டபோது
உனக்கும் எனக்குமான
கண்ணாடியில்
பிரிவின் கீறல்கள்
முகம்கள் மறைத்து மீண்டும்
சிரிக்க முயற்சிக்கின்றன
எதையும் தொடர முடியாமல்
எதுவும் தொடவும் முடியாமல்
தவிக்கும் பாதங்களுக்கிடையில்
Tuesday, June 24, 2008
தூரத்தில் தோழி
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, June 24, 2008 6 comments
Tuesday, May 27, 2008
Friday, May 16, 2008
Tuesday, May 6, 2008
அன்புள்ளக் கடவுளுக்கு
அன்புள்ளக் கடவுளுக்கு,
இதுதான் இறுதி என்று
எழுதுகிறேன்..
எத்தனை முறை எழுதுவது
கடிதம் உனக்கு?
பிரிக்கப்படாமலும் படிக்கப்படாமலும்
கிடக்கின்றன அவை
முகவரியே நீ தான்
தர மறுக்கிறாய்
உள்ளே இருந்து கொண்டு
வர மறுக்கிறாய்
நீ யார் என்ற போருக்குள்
யார் நீ என்ற கேள்விகளுக்குள்
விரிந்துகொண்டே போகிறாய்
அழுகையை மட்டும்
உனக்கும் எழுதிவைக்கிறேன்
நீ தான் பொறுப்பென்று
சுகத்தை எனக்குள்
பதுக்கி வைக்கிறேன்
நிரந்தரமென்று
நிரந்தரமென்று
எதையும் பொருட்படுத்தாத
உன் மௌனத்தைக் கண்டு
உன் மௌனத்தைக் கண்டு
என் பேனா முனைகள்
உடைகின்றன
தூர வீசுகின்றேன்
கோபம் களைந்து
மீண்டும் எழுதுகிறேன்
உன் மௌனத்தைக் கலைக்க
ஒரு கடிதம்
உன் மௌனத்தைக் கலைக்க
ஒரு கடிதம்
இதுதான் இறுதியென்று...
இப்படிக்கு,
என்றும் நான்
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, May 06, 2008 3 comments
Friday, April 4, 2008
ஒன்று
ஒரு நிமிடம் போதும்
ஒரு சொல் போதும்
ஒரு பார்வை போதும்
ஒரு பகல் போதும்
ஒரு இரவு போதும்
ஒரு நிலவும் போதும்
ஏதோ ஒன்றை நிகழ்த்த
எதையாவதை இழக்க
எதையாவதை கொடுக்க
எதையாவதை விரும்ப
எதையாவதை வெறுக்க
ஏதோ ஒன்று போதும்!
Posted by ரகசிய சிநேகிதி at Friday, April 04, 2008 5 comments
Friday, March 28, 2008
மௌனமும் மரணமும்
* கொன்று சாய்ப்பது
மரணம் மட்டுமல்ல
சிலரின் சிலசமய
மௌனங்களும் தான்
Posted by ரகசிய சிநேகிதி at Friday, March 28, 2008 3 comments
Subscribe to:
Posts (Atom)



