BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Friday, August 15, 2008

கொலை முயற்சி




அன்றே
நான் இறந்ததாய்
சில மலர்
வளையங்களைச்
செலுத்தி இருப்பாய்
இன்னும் பெயரிடாதாய்
அந்தக் கல்லறைகளில்
அங்கே என்னைத்
தேடியும்
தொலைத்திருப்பாய்
தீராத சந்தேகம்
தீர்க்க வரும்
தேடல்களில்

வார்த்தைகளால்
என் உடலெங்கும்
பிரம்ம அஸ்திரங்கள்
தொடுக்கவும்
முயற்சிக்கிறாய்

அவை
என் இறப்பை
உறுதி செய்ததாய்
மீண்டுமொரு நிம்மதி
பெரும் மூச்சுக்
கொள்கிறாய்
இறந்து பிறக்கும்
என் காதலில்!

Thursday, August 14, 2008

ஒர் அழைப்பு



என்னை நான்
மறந்த உறக்கத்தில்
விசைகளின்றி
தட்டி எழுப்பும்
இடது புருவத் துடிப்பு

தூர தேசத்தில்
உன் பயணங்கள்
என்னை நோக்கி
வருவதாய் தீண்டி
செல்லும்
ஒர் தேவதையின்
அழைப்பு

Thursday, August 7, 2008

இதுவும் நட்புதான்



நரம்பறுந்த வீணையிலிருந்து
மீண்டும் இசை மீட்க முயலும்
உன் விரல்களை விரும்பியே
தவிர்க்கிறேன் தோழி
குற்றமாய் நீ வீசும்
பார்வைகளிலிருந்து

என் நட்பு களங்கப்பட
வேண்டாமென வேண்டி
உன் பயணங்களாவது
குற்றமற்றதாய் விளங்கட்டும்
என்று வாழ்த்தி !

அவளும் பெண் என்பதால்




உன் புது துணைக்கான
தேடல்கள் ஒவ்வொரு
முறையும் நீ
தொடங்கும் போது
என் உயிர் அறைகள்
மரணம் சம்பவிப்பதாய்
கனவில் வரும்
உன் தாயிடம் சொல்

பெண் என்பதால்
அவளுக்கே புரியும்
சிதைந்த என் இதயத்தின்
வலிகளும்
அதில் இரத்தம்
ஒழுகும் உன் நினைவுகளும்

நீயாக வந்து பிடுங்கினாலும்
மீண்டும் விழுதாய் பிறக்கும்
உன் மேல் நான் கொண்ட
நேசத்தின் வேர்களை
காற்றில் கலந்த
உன் தாய் அவள்
மட்டுமே அறிவாள்
மறைந்த பொழுதில்
நீ என்னை நேசிப்பதாய்
மொழிந்த வரிகளை

Wednesday, July 16, 2008

மழை


ஈரமற்ற
இதயங்களுக்காகப்
பெய்து கொண்டிருக்கும்
மழை.

Tuesday, July 15, 2008

HIV குழந்தைகள்


முள்ளோடும் பிறந்தாலும்
ரோஜாக்கள் சிரித்துக்
கொண்டு தான் இருக்கின்றன

Tuesday, June 24, 2008

தூரத்தில் தோழி



தனிமை ஒவ்வொரு முறையும்
என்னை சூழ்ந்து கொண்டபோது
உனக்கும் எனக்குமான
கண்ணாடியில்

பிரிவின் கீறல்கள்
முகம்கள் மறைத்து மீண்டும்
சிரிக்க முயற்சிக்கின்றன
எதையும் தொடர முடியாமல்
எதுவும் தொடவும் முடியாமல்

தவிக்கும் பாதங்களுக்கிடையில்

Tuesday, May 27, 2008

உறவுகள்


Friday, May 16, 2008

அம்மா

Tuesday, May 6, 2008

அன்புள்ளக் கடவுளுக்கு



அன்புள்ளக் கடவுளுக்கு,
இதுதான் இறுதி என்று
எழுதுகிறேன்..
எத்தனை முறை எழுதுவது
கடிதம் உனக்கு?

பிரிக்கப்படாமலும் படிக்கப்படாமலும்
கிடக்கின்றன அவை
முகவரியே நீ தான்
தர மறுக்கிறாய்
உள்ளே இருந்து கொண்டு
வர மறுக்கிறாய்
நீ யார் என்ற போருக்குள்
யார் நீ என்ற கேள்விகளுக்குள்
விரிந்துகொண்டே போகிறாய்
அழுகையை மட்டும்
உனக்கும் எழுதிவைக்கிறேன்
நீ தான் பொறுப்பென்று
சுகத்தை எனக்குள்
பதுக்கி வைக்கிறேன்
நிரந்தரமென்று
எதையும் பொருட்படுத்தாத
உன் மௌனத்தைக் கண்டு
என் பேனா முனைகள்
உடைகின்றன
தூர வீசுகின்றேன்
கோபம் களைந்து
மீண்டும் எழுதுகிறேன்
உன் மௌனத்தைக் கலைக்க
ஒரு கடிதம்
இதுதான் இறுதியென்று...
இப்படிக்கு,
என்றும் நான்