இன்று வரை ஊனப்பட்டு தான்
கிடக்கிறது என் வீடு
அவரின் காலடியோசைகளின்றி
விறகுகளால் வெந்து மறைந்த
உடலையும்
கற்பூரங்களால் கரைந்த ஊயிரையும்
தேடியலைகிறது மனம்
யார் யாரோ வந்து போக
யார் யாரோ உரிமைகளை
உரிமையாய் பகிர
கேள்வி பதில்களுக்கும்
இடமில்லாமல் போயிருக்கும்
நீங்கள் இருந்திருந்தால்…
வாழ்வு இன்னொரு
பரிமாணத்தில் எனக்காக
நகரும் தருணங்களில்
இழப்பு என்பது இவ்வளவு
துயர் நிறைந்த்தா…
இன்றுதான் அதன் முழுமையை
உணர்கிறேன்..
0 comments:
Post a Comment