BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Sunday, November 21, 2010

நீ இருந்தும்



நீ இருந்தும் ...
கண்களில் தூசி விழுகின்றன
நிலாக்களற்ற இரவுகளே வருகின்றன
மௌனங்கள் மொழியாகின்றன
வார்த்தைகள் பொருளற்று
வீழ்கின்றன
நீ இருந்தும்...

பதில்களற்ற கேள்விகளாய்
பாதைகளற்ற பயணங்களாய்
உயிருள்ள பிணமாய்
பசியற்று உண்ணுக்கிறேன்
உன் தெருக்களில்
நீ இருந்தும்...

இப்படி தான் விடியுமோ
என் வாசற் சூரியன் இனி
நீ இருந்தும்....
நான்.... நான்.... நான் மட்டுமே
நீ இருந்தும்...

2 comments:

அஷ்வின் நாரயணசாமி said...

////பதில்களற்ற கேள்விகளாய்
பாதைகளற்ற பயணங்களாய்
உயிருள்ள பிணமாய்....

எனக்கு பிடித்தமான அருமையான வரிகள்... அழகிய கவிதை.. எப்படி தோழி நீங்கள் உண்ர்ந்து எழுதுகீற்களா.. இல்லை எப்படி???

உங்கள் ஒவ்வோரு கவிதையும் ஒரு தனி அழகு... வாழ்த்துக்கள்

ரகசிய சிநேகிதி said...

நன்றி அஷ்வின்