BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Thursday, March 19, 2009

பேசும் சித்திரங்கள்


சுவரில்லாமல் சித்திரங்கள் நான்
வரையத் தொடங்கிய பொழுதொன்றில்

இருள் சூழ
எங்கோ மறைந்து போயின அவை


பின் என் நிழலுக்குப் பின்னால்
நின்று பேருருவம் கொண்டு
சிரிக்கத் தொடங்கியது
தன்னை ஓர் எஜமானி என்று
சொல்லிக் கொண்டது

தன் கர்வம் தீர
என்னை
முழுதும் தின்று விழுங்கியது

மூச்சடைத்து நான்
இறந்த போது

கர்ஜித்துக் கொண்டே வெளியேறியது
மீண்டும் நான் வெளிப்படுவேன்
என்று கோசமிட்டு

நீண்ட மௌனப் பெருவெளிக்குப் பின்
மீண்டும் நான் உயிர்ப் பெற்றேன்
..

12 comments:

நட்புடன் ஜமால் said...

சித்திரமாய் தொடங்கி

விசித்திரமாய் முடித்துள்ளீர்கள்

\\நீண்ட மௌனப் பெருவெளிக்குப் பின்
மீண்டும் நான் உயிர்ப் பெற்றேன்.. \\

அழகு ...

புதியவன் said...

பின் நவீனம்...?

//மூச்சடைத்து நான்
இறந்த போது

கர்ஜித்ததுக் கொண்டே வெளியேறியது
மீண்டும் நான் வெளிப்படுவேன்
என்று//

வார்த்தைகள் வியக்க வைக்கின்றன...

ரகசிய சிநேகிதி said...

=================================
நட்புடன் ஜமால் said...
சித்திரமாய் தொடங்கி

விசித்திரமாய் முடித்துள்ளீர்கள்

\\நீண்ட மௌனப் பெருவெளிக்குப் பின்
மீண்டும் நான் உயிர்ப் பெற்றேன்.. \\

அழகு ...
==================================
மிக்க நன்றி மீண்டும் வாருங்கள் ஜமால்...

ரகசிய சிநேகிதி said...

===================================
புதியவன் said...
பின் நவீனம்...?

//மூச்சடைத்து நான்
இறந்த போது

கர்ஜித்ததுக் கொண்டே வெளியேறியது
மீண்டும் நான் வெளிப்படுவேன்
என்று//

வார்த்தைகள் வியக்க வைக்கின்றன...
==================================
மிக்க நன்றி மீண்டும் வாருங்கள்

நவீன் ப்ரகாஷ் said...

//மூச்சடைத்து நான்
இறந்த போது
கர்ஜித்துக் கொண்டே வெளியேறியது
மீண்டும் நான் வெளிப்படுவேன்
என்று //

மிக அழகான நிதர்சன வரிகள்...!!

மிகவும் ரசித்தேன் மேகா...!! :))

ரகசிய சிநேகிதி said...

===================================
நவீன் ப்ரகாஷ் said...
//மூச்சடைத்து நான்
இறந்த போது
கர்ஜித்துக் கொண்டே வெளியேறியது
மீண்டும் நான் வெளிப்படுவேன்
என்று //

மிக அழகான நிதர்சன வரிகள்...!!

மிகவும் ரசித்தேன் மேகா...!! :))
========================================> மிக்க நன்றி நவீன். மீண்டும் மீண்டும் வாருங்கள்

Sublime Remembrance said...

such beautiful use of imagery...kalakiteenga :D

கருணாகார்த்திகேயன் said...

சுய அழகியல்..

ரசித்து படித்தேன்

அன்புடன்
கருணா கார்த்திகேயன்

வால்பையன் said...

இப்படி புரியமுடியாமல் எழுதும் கவிதைக்கு என்ன பெயர்?

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அற்புதமான படைப்பு.
அன்புடன்
ஜகதீஸ்வரன்
http://jackpoem.blogspot.com

Anonymous said...

அழகாய் இருக்கிறது கவிதை..

இராவணன் said...

நல்ல பதிவு.

//நீண்ட மௌனப் பெருவெளிக்குப் பின்
மீண்டும் நான் உயிர்ப் பெற்றேன்..//

மிக ஆழமானது.