ஏன் ரோஜாக்களை
ஏந்தி நிற்கிறாய்
கல்லறை மீது செலுத்தவா?
சோகங்கள் கறைப்படியும் முன்
தூரப்போ....
அவைகளாவது சிரிக்கட்டுமே
Wednesday, November 19, 2008
தூரப் போ...
Posted by ரகசிய சிநேகிதி at Wednesday, November 19, 2008 11 comments
Thursday, October 30, 2008
நினைவில் மட்டுமே
• ஆழ்ந்த உறக்கத்தில் அப்பா
துக்கத்தில் ஆழ்ந்து விட்ட வீடு
சிரித்துக் கொண்டே நுழைந்தன
மலர்வளையங்கள்
• அறையில் அழுது
கொண்டிருக்கும் அம்மா
சுவரில் மௌனமாய் சிரித்துக்
கொண்டிருக்கும் அப்பா
தன் நெற்றிப் பொட்டை
அப்பாவின் நிழல் படத்தில்
இடும் அம்மா.
• இன்றும் அப்பாவின் உழைப்பை
ஞாபகப்படுத்திக் கொண்டே
இருக்கின்றன
வாசலில் கிடக்கும்
அவரின் தேய்ந்த செருப்புகள்
• பள்ளிக்கு வழியனுப்பி வைத்த
அப்பாவை
முட்கள் குத்திய வலியோடு
கல்லறைக்கு வழியனுப்பி
நின்றன கால்கள்
• நிம்மதியை எடுத்துக் கொண்டு
நிம்மதியாய் உறங்கும் அப்பா
கனவில் வந்து போனாலும்
வருவது அப்பா என்பது தான் நிஜம்.
• உரிமையோடு அழைக்க முடியாதபடி
இன்று நான் இழந்து விட்ட
ஒரு வார்த்தை "அப்பா"
Posted by ரகசிய சிநேகிதி at Thursday, October 30, 2008 13 comments
Friday, September 19, 2008
நிகழ்ந்தாக வேண்டும்
நிகழ்ந்தாக வேண்டும்
என்ற நிபந்தனைகளும்
நடந்தாக வேண்டும்
என்ற வற்புறுத்தல்களிலும்
நடக்க தொடங்கும்
கால்கள்
பொழுது விடிந்ததினால்
விரும்பாமல் விழித்து கொள்ளும்
கண்களில்
மிச்சமிருப்பது வெறுமையே
எதிர்ப்படும் சிலருக்காக
அவ்வப்போது உதிர்ந்துவிடும்
புன்னகையை
விரித்தி பார்த்தால்
உண்மையில் எதுமே இல்லை
என்று புலப்படும் ஒரு
கூற்றில் குறுகி போயுள்ளது
இந்த இரவல் வாழ்க்கை!
முடிந்த பொழுதில்
மலர போகிறது
நாளை என்றொரு பொழுது
இதே வண்ணத்தில்
நீயும் நானும் பூசிக் கொள்ள
மீண்டும்
நிகழ்ந்தாக வேண்டும் என்ற
நிர்பந்தத்தோடு
சில நிபந்தனைகளோடு
Posted by ரகசிய சிநேகிதி at Friday, September 19, 2008 24 comments
Monday, September 8, 2008
பேய் கோபம்
உணர்வுகளை அறுத்து
வழியும் கண்ணீர்
நாவில் கசியும்
நஞ்செல்லாம்
மௌனக் குடத்தில்
ஏந்தி நிற்கும் உதடுகள்
கண்டனங்களை
எழுதவரும் கைகளை
வெட்டியெறியும் விரல்கள்
புலன்களின் வேர் பிடுங்க
முளைத்து கொண்டு வளர்கிறது
பேய் கோபம் ஒன்று
நீ தரும் உணவுகளைத்
தின்று தின்று
கோர பற்களால் குத்தி
கனவுகளைப் பலிக் கொடுக்க
காத்திருக்கும் என்னுள்
ஒதுங்கி நின்று அழுகிறது
ஓர் ஆத்மா
Posted by ரகசிய சிநேகிதி at Monday, September 08, 2008 16 comments
Tuesday, September 2, 2008
சிதறிய பிம்பங்கள்
மனசாட்சியை விலங்கிட்டு
கடவுளைச் சிறைட்ட
உன் ரேகையில் பதிந்து
கிடந்தது ஒரு வாசகம்
துரோகம் என்று
அதிகாலை மழை
போர்வைக்குள்
ஒளிந்து கொள்ளும்
உன் நினைவுகள்
தீப்பற்றி எரிகிறது
என் தெரு வீடுகள்
தென்றலின் வருகைக்காக
திறந்து வைத்த ஜன்னலில்
ஓலமிட்டு நிற்கிறது
நரி ஒன்று
ஒவ்வொரு வரியிலும்
கறைப்படியும் உன்
நினைவுகளைச்
சொல்ல வரும் கவிதை
இறக்கிறதா ? பிறக்கிறதா?
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, September 02, 2008 26 comments
Tuesday, August 19, 2008
ஏய் மழையே
துளிகள் எல்லாம் தூரிகையாய்
மேனியெங்கும் மெல்ல வருடி
மேகம் வரைந்த ஓவியங்கள்
கோலமிடும் பாதத்தில்
ஈரம் கொண்ட மருதாணி
நாணத்தில் சேர்ந்து நிறக்க
உன்னில் கரையும் என்னை
கொஞ்சம் காதலித்துப் போ
வெள்ளித் துளியே
நனையும் பருவத்தை
நாளையும் தருவதாய்
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, August 19, 2008 13 comments
Friday, August 15, 2008
கொலை முயற்சி
அன்றே
தேடியும்
தீர்க்க வரும்
Posted by ரகசிய சிநேகிதி at Friday, August 15, 2008 14 comments
Thursday, August 14, 2008
ஒர் அழைப்பு
மறந்த உறக்கத்தில்
விசைகளின்றி
தட்டி எழுப்பும்
இடது புருவத் துடிப்பு
உன் பயணங்கள்
என்னை நோக்கி
வருவதாய் தீண்டி
ஒர் தேவதையின்
அழைப்பு
Posted by ரகசிய சிநேகிதி at Thursday, August 14, 2008 3 comments
Thursday, August 7, 2008
இதுவும் நட்புதான்
Posted by ரகசிய சிநேகிதி at Thursday, August 07, 2008 12 comments
அவளும் பெண் என்பதால்
உன் புது துணைக்கான
என் உயிர் அறைகள்
மரணம் சம்பவிப்பதாய்
கனவில் வரும்
உன் தாயிடம் சொல்
பெண் என்பதால்
அவளுக்கே புரியும்
சிதைந்த என் இதயத்தின்
வலிகளும்
அதில் இரத்தம்
ஒழுகும் உன் நினைவுகளும்
நீயாக வந்து பிடுங்கினாலும்
மீண்டும் விழுதாய் பிறக்கும்
உன் மேல் நான் கொண்ட
மட்டுமே அறிவாள்
Posted by ரகசிய சிநேகிதி at Thursday, August 07, 2008 4 comments
Wednesday, July 16, 2008
Tuesday, July 15, 2008
Tuesday, June 24, 2008
தூரத்தில் தோழி
தனிமை ஒவ்வொரு முறையும்
என்னை சூழ்ந்து கொண்டபோது
உனக்கும் எனக்குமான
கண்ணாடியில்
பிரிவின் கீறல்கள்
முகம்கள் மறைத்து மீண்டும்
சிரிக்க முயற்சிக்கின்றன
எதையும் தொடர முடியாமல்
எதுவும் தொடவும் முடியாமல்
தவிக்கும் பாதங்களுக்கிடையில்
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, June 24, 2008 6 comments
Tuesday, May 27, 2008
Friday, May 16, 2008
Tuesday, May 6, 2008
அன்புள்ளக் கடவுளுக்கு
அன்புள்ளக் கடவுளுக்கு,
பிரிக்கப்படாமலும் படிக்கப்படாமலும்
கிடக்கின்றன அவை
நிரந்தரமென்று
உன் மௌனத்தைக் கண்டு
உன் மௌனத்தைக் கலைக்க
ஒரு கடிதம்
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, May 06, 2008 3 comments
Friday, April 4, 2008
ஒன்று
ஒரு நிமிடம் போதும்
ஒரு சொல் போதும்
ஒரு பார்வை போதும்
ஒரு பகல் போதும்
ஒரு இரவு போதும்
ஒரு நிலவும் போதும்
ஏதோ ஒன்றை நிகழ்த்த
எதையாவதை இழக்க
எதையாவதை கொடுக்க
எதையாவதை விரும்ப
எதையாவதை வெறுக்க
ஏதோ ஒன்று போதும்!
Posted by ரகசிய சிநேகிதி at Friday, April 04, 2008 5 comments
Friday, March 28, 2008
மௌனமும் மரணமும்
* கொன்று சாய்ப்பது
மரணம் மட்டுமல்ல
சிலரின் சிலசமய
மௌனங்களும் தான்
Posted by ரகசிய சிநேகிதி at Friday, March 28, 2008 3 comments