BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Thursday, August 7, 2008

அவளும் பெண் என்பதால்




உன் புது துணைக்கான
தேடல்கள் ஒவ்வொரு
முறையும் நீ
தொடங்கும் போது
என் உயிர் அறைகள்
மரணம் சம்பவிப்பதாய்
கனவில் வரும்
உன் தாயிடம் சொல்

பெண் என்பதால்
அவளுக்கே புரியும்
சிதைந்த என் இதயத்தின்
வலிகளும்
அதில் இரத்தம்
ஒழுகும் உன் நினைவுகளும்

நீயாக வந்து பிடுங்கினாலும்
மீண்டும் விழுதாய் பிறக்கும்
உன் மேல் நான் கொண்ட
நேசத்தின் வேர்களை
காற்றில் கலந்த
உன் தாய் அவள்
மட்டுமே அறிவாள்
மறைந்த பொழுதில்
நீ என்னை நேசிப்பதாய்
மொழிந்த வரிகளை

4 comments:

MSK / Saravana said...

ரொம்ப ரொம்ப நல்லாஇருக்கு..

ஒவ்வொரு வரியும் அருமை..

Ravishna said...

/*பெண் என்பதால்
அவளுக்கே புரியும்
சிதைந்த என் இதயத்தின்
வலிகளும்
அதில் இரத்தம்
ஒழுகும் உன் நினைவுகளும்*/

This line is super.Good...I like sad verses more than a happy verses now-a-days.thanks a lot.

ரகசிய சிநேகிதி said...

===================================
ரொம்ப ரொம்ப நல்லாஇருக்கு..

ஒவ்வொரு வரியும் அருமை..
===================================
நன்றி சரவணக் குமார்.. u r most welcome here..friend.

ஜியா said...

kavithai varigal arumai.. rendu moonu thadava padichathukku appuram thaan purinjuthu :)))

//காற்றில் கலந்த
உன் தாய் அவள்
மட்டுமே அறிவாள்
மறைந்த பொழுதில்//

avan amma uyiroda illaiyaa??